×

பாத்தி கட்டி சேனைக்கிழங்கு சாகுபடி குழந்தைகள் விளையாடியதில் தகராறு தொழிலாளியை தாக்கியவர் கைது

க.பரமத்தி, அக்.29: புரவிபாளையத்தில் குழந்தைகள் விளையாடியதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். கரூர் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் சடையப்பன் மகன் சதீஷ்குமார் (29).தொழிலாளி. இதே போல தும்பிவாடி அருகே புரவிபாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி மகன் காமராஜ் (எ) நெப்போலியன்(26). இவர்களுக்குள் குழந்தைகள் விளையாடியதில் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் பாதிக்கப்பட்ட சதீஸ்குமார் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சதீஸ்குமார் அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் நெப்போலியன் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : laborer ,
× RELATED கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது