×

பெண்ணிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு

குளித்தலை, அக்.29: குளித்தலை அருகே பெண்ணிடம் ஆறரை பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். குளித்தலை அடுத்த இனுங்கூர் புதுபட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் நேற்று முன்தினம் மாலை மகன் ரோஹித்துடன் ஓந்தாம்பட்டியிலிருந்து புதுப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த முன்பின் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென கிருஷ்ணவேணி கழுத்தில் இருந்த ஆறரை பவுன் தாலி செயினை பறித்து சென்று விட்டார். இது குறித்து குளித்தலை போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது