அவனியாபுரம், அக். 28: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜைக்கு செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த பாஜக தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிககளை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது. ரஜினி இன்னும் கட்சி துவங்கவில்லை. எனினும் கூட்டணி அமைவது குறித்து இறுதி முடிவு ரஜினியை பொறுத்துதான். மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு நிறைவேற்ற பாஜக சார்பில் முயற்சி எடுக்கப்படும்’ என்றார்.