ஆர்.எஸ்.மங்கலம், அக்.28: ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள டி.டி மெயின்ரோடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் பால்சாமி(65). இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அறிந்த ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நாகநாதன் சென்று கடையை சோதனை செய்ததில் அங்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 பாக்கெட் புகையிலை பாக்கெட்களை
பறிமுதல் செய்து பால்சாமியை கைது செய்தனர்.