திருச்செங்கோடு, அக்.28: திருச்செங்கோடு அடுத்த சின்ன எலச்சிபாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தேவராஜ்(55). இவர் நேற்று டூவீலரில் திருச்செங்கோடு வந்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திம்மராவுத்தன்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த டூவீலர், தேவராஜின் டூவீலர் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவராஜ், பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.