×

ரோல் தொடர்பாக நளினியிடம் முருகன் ஆலோசனை வேலூர் மத்திய சிறையில் இருந்து வீடியோ கால்

வேலூர், அக். 28: வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் வீடியோகால் மூலம் நளினியிடம் பேசினார். அப்போது பரோல் கேட்பது தொடர்பாக ஆலோசித்தனர் என்று போலீசார் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆண்கள் சிறையில் உள்ள முருகனும், பெண்கள் சிறையில் உள்ள நளினியும் வீடியோ காலில் பேசி வருகின்றனர். அதன்படி நேற்று 2 பேரும் வீடியோ காலில் சுமார் 10 நிமிடங்கள் பேசினர். அப்போது இருவரும் பரோல் தொடர்பாக பேசியுள்ளனர். தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த முருகனின் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கு தொடர்பாக பரோல் கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக நளினியிடம், முருகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Murugan ,Nalini ,Vellore Central Jail ,
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை