×

திருவாரூரில் 120 பேர் கைது நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை

திருவாரூர், அக் 28:தமிழகத்தில் வெங்காயம் விலை உயர்ந்ததையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் பண்ணைப் பசுமை கடைகளில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வெங்காய விலை உயர்வு என்பது தற்காலிகமானதுதான் என்றும் தேவைப்பட்டால் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் காகிதகார தெருவில் இயங்கி வரும் சுயசேவை பிரிவு மூலம் கிலோ ரூ. 45 க்கு வெங்காயம் விற்பனையை நேற்று கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆசைமணி துவங்கி வைத்தார். இதில் பண்டக சாலையின் தலைவர் கலியபெருமாள், கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயராமன், பண்டகசாலையின் மேலாண்மை இயக்குனர் ராமசுப்பு, பொதுமேலாளர் காளிதாஸ் மற்றும் இயக்குனர்கள் சின்னராஜ், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvarur ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...