×

புதுகை கலெக்டர் உத்தரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலா தின போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

புதுக்கோட்டை, அக். 28: உலக சுற்றுலா நாளையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு புதுகை கலெக்டர் உமாமகேஸ்வரி பரிசுகளை வழங்கினார். உலக சுற்றுலா நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் மற்றும் வினாடி-வினா போட்டிகள் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வென்ற 24 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags : winners ,district ,Pudukottai ,Tourism Day ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்