×

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை,அக்.28: இந்து பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மநூலை தடை செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகூர் பஸ்ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை சட்டசபை தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் தமிழ்முகம், முத்துவளவன், நாகை சட்டசபை தொகுதி துணை செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மநூலை தடை செய்ய வேண்டும். திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசு மனுதர்ம நூலை நீக்க வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகூர் நகர துணை செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

Tags : parties ,
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு