×

திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

நாகை,அக்.28: இந்து பெண்களை இழிவுபடுத்திய பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிரணி சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு
நாகை மாவட்ட மகளிரணி தலைவர் வசந்தி தலைமை வகித்தார். பாஜ மாவட்ட தலைவர் நேதாஜி வரவேற்றார். மகளிரணி மாவட்ட செயலாளர்கள் அன்னராணி சரவணன், சுமதிமுருகன், சுமதிகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து பெண்களை இழிவுப்படுத்தி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் ஜீவஜோதி, பொதுச்செயலாளர் மீராபாய், நகர தலைவர் கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : women ,BJP ,team protests ,Thirumavalavan ,
× RELATED ராதிகாவுக்கு ‘சீட்’ புலம்பும் குஷ்பு: ஓரங்கட்டும் பாஜ