×

தூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 28:  திருப்பூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி சிஐடியு சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் உண்ணிக்கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு  2 மாத சம்பளம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவித்த ரூ. 510 சம்பளத்தை வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு தூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags : demonstration ,CITU ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு