×

காரிமங்கலம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது

காரிமங்கலம், அக்.23:காரிமங்கலம் அடுத்த கும்பாரஅள்ளியை சேர்ந்த 15வயது சிறுமி, காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வீட்டை விட்டு சென்ற சிறுமி வீடு திரும்பாததால், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், சிறுமியின் தந்தை புகார் அளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த பாலன் மகன் பாலமுருகன்(21), என்பவர் தனது மகளை கடத்தி சென்றதாக கூறியிருந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், கோவையில் தங்கியிருந்த இருவரையும் மீட்டனர். பின்னர், மாணவியை கடத்திய பாலமுருகனை, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Karimangalam ,
× RELATED மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்