×

பைக் விபத்தில் தொழிலாளி பலி

ஆரணி, அக்.23: ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்(42), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 20ம் தேதி தனது நண்பர் சுதாகர் என்பவருடன் பைக்கில் கட்டிட வேலைக்காக சென்றபோது நிலைதடுமாறி பைக் விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயமடைந்த கோபால் மற்றும் சுதாகரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக இருவரும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோபால் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கோபால் மனைவி சந்திரா, ஆரணி தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bike accident ,
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி