×

வேளாண்மை மசோதாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் எம்பி மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார்


சிவகாசி, அக். 23: சிவகாசி அருகே சித்துராஜபுரம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,`` மத்திய அரசு ஏழைகளின் விவசாய நிலங்களை பறித்து பெரும் முதலாளிகளிடம் கொடுக்க இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக மாநில அதிமுக அரசும் இந்த துரோகத்துக்கு துணையாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 1 லட்சம் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவரிடம் வழங்கப்படும். தமிழகத்தில் மத்திய அரசின் அடிமை ஆட்சியை அகற்ற காங்கிரஸ் கட்சி துணையாக இருக்கும். அதிமுக அரசு அணைய போகிற விளக்கின் கடைசி அத்தியாயமாக உள்ளது என்று அவர் கூறினார்.

Tags : Manikkam Tagore ,
× RELATED நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு...