×

மழை பெய்தாலே குண்டும், குழியும்தான் கன்னிகாபுரம் மக்கள் புலம்பல்

வருசநாடு, அக். 23: கடமலை மயிலை அருகே கன்னிகாபுரம் மலைக்கிராமத்திற்கு தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு கன்னிகாபுரம் மலைக்கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. தார்ச்சாலை வசதி செய்து தர கோரி கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கிராமசபை கூட்டங்களிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களின்போது இந்த சாலை குண்டும், குழியுமாக மாறி விடுகிறது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே கன்னிகாரபுரத்தில் விரைவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு