×

கள்ளிக்குடி ஒன்றியத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்தார்

திருமங்கலம், அக்.23:கள்ளிக்குடி ஒன்றியத்தில் பேய்க்குளம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் மற்றும் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை, குராயூரில் ஆரம்ப சுகாதார நிலையம், மொச்சிக்குளத்தில் நாடகமேடை உள்ளிட்ட புதிய கட்டிடங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். தொடர்ந்து மருதங்குடி கிராமத்தில் நடந்த அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், அன்பழகன், அவைத்தலைவர் அய்யப்பன், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கபிகாசிமாயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,buildings ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...