×

லால்குடி அருகே டூவீலரில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

லால்குடி, அக்.23: லால்குடி அடுத்த மேட்டுப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் யோகேஸ்வரன்(23), டிப்ளமோ படித்தவர். இவர் கடந்த 12ம் தேதி மேட்டுப்பட்டியில் இருந்து கொப்பாவளி வழியாக தனது டூவீலரில் லால்குடி வந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த யோகேஸ்வரன் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் ேநற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Lalgudi ,
× RELATED லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100...