×

கலெக்டர் அறிவிப்பு மக்கள் பாதை வழியாக செல்லும் வாய்க்காலில் மண்டி கிடக்கும் முட்புதரில் விஷ ஜந்துக்கள்

கரூர், அக். 23: கரூர் நகராட்சி மக்கள் பாதையின் வழியாக செல்லும் வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதையில் குடியிருப்புகளின் வழியாக வாய்க்கால் செல்கிறது. பல மாதங்களாக இந்த வாய்க்கால் சீரமைக்கப்படாத நிலையில் தற்போது வாய்க்காலில் முட்புதர்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடியிருப்புகளை ஒட்டி இந்த வாய்க்கால் செல்வதால் இந்த வாய்க்காலை சுற்றியுள்ள முட்புதர்களில் இருந்து விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த வாய்க்கால் பகுதி முழுதும் உள்ள முட்புதர்கள் மற்றும் மண் மூடியுள்ள பகுதிகளை அகற்றிட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...