×

வாலிபர் வீட்டின் முன் அமர்ந்து கர்ப்பிணி தர்ணா மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கடலூர், அக். 22: கடலூர் முதுநகர் அருகே உள்ள சொத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவியரசி(30). இவருக்கும், தைக்கால் தோணித்துறை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது, இதில் கவியரசி கர்ப்பம் அடைந்தார். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட வாலிபர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த கவியரசி, நேற்று காலை அந்த வாலிபரின் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கடலூர் துறைமுகம் போலீசார் வந்தனர். அவர்களிடம், தன்னை கர்ப்பிணியாக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். சிறிது நேரத்தில் கவியரசி திடீரென மயங்கி விழுந்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tarna ,house ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...