சிவகாசி. அக். 22: பட்டாசு விபத்து தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க சிவகாசியில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர், சிவகாசி சுற்றுவட்டாரங்களில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் குறித்து தொழிலாளர்கள், பொதுமக்கள் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வசதியாக கட்டணமில்லா தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1800 425 6743 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு அபாயகரமான நிகழ்வுகள், விபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.