×

தென்னை சார்ந்த தொழிலை அரசு ஊக்கப்படுத்தினால் வேலை வாய்ப்பு ெபருகும்

கீழக்கரை, அக்.22: மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி, காஞ்சிரங்குடி, மாயாகுளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. தேங்காய் விற்பனை சந்தையில் கீழக்கரை முக்கிய இடம் பெற்றுள்ளது. இப்பகுதி தேங்காய் ருசி மிகுந்ததாக இருக்கும். தென்னை கழிவு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட பொருள் தற்போது சர்தேச சந்தையில் மதிப்புமிக்கதாக ஆகியுள்ளது. தேங்காய்களை உறித்த பிறகு, அவற்றிலிருந்து கிடைக்கும் மட்டைகளை மெஷினில் அரைத்தால் கயிறு தயாரிக்க பயன்படக்கூடிய நார் கிடைக்கும். நரம்பு போல் நீளமாக இருக்கும் நாரைத் திரித்தே கயிறு உற்பத்தி செய்யப்படும். மட்டைகளை அரைக்கும்போது சிறிய அளவிலான தூள்களாகவும் வெளியே வரும். இந்த தூள்களை ஒரு காலத்தில் வேண்டாத பொருளாக குப்பையில் கொட்டுவர். ஆனால் தற்போது இந்த தூளுக்கு சர்வதேச சந்தையில் கடும் வரவேற்பு உள்ளது.

தூள் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். அதை அப்படியே கேக் வடிவில் கட்டியாகத் தயார் செய்து ஏற்றுமதி செய்யலாம். ஆனால், இதுபோன்ற கட்டிகளை வெளிநாடுகளில் வாங்கி அவற்றைத் தூளாக்கி கோழிப் பண்ணைகளில் தரைப்பகுதியில் பெட் போன்று அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. 5 கிலோ, 65 கிராம், 30 கிராம், 10 கிராம் போன்ற எடைகளில் கட்டிகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. 5 கிலோ கேக் 80 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் தன்மை கொண்டது.

வெளிநாடுகளில் கேக்கை வாங்கி மறுபடியும் தூளாக்கி மாடித்தோட்டம், புல்தரை அமைப்பது, காய்கறிச் சாகுபடி, மரக்கன்றுகள் வளர்ப்பது போன்ற எளிய முறையான விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மிகச் சிறிய அளவிலான கட்டியில் விதைகளை ஊன்றி மரக்கன்றுகள் வளர்த்து வருகின்றனர். இந்த தூள்கள் மூலம் சொட்டுநீர் முறையைப் பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசு தென்னை தொழிலை இப்பகுதியில் ஊக்கப்படுத்தினால் தென்னை சார்ந்த எண்ணற்ற தொழில் உருவாகும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

Tags : government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...