×

பல ஆண்டு பிரச்னை தீர்ந்தது தஞ்சை கரந்தையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை, அக். 22: தஞ்சை கரந்தையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தஞ்சை கரந்தை மெயின்ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே இடத்தில் ஆளுங்கட்சியினர் ஆதரவோடு டாஸ்மாக் கடையை அதிகாரிகள் திறக்க முயற்சித்து வருகின்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த டிஎஸ்பி பாரதிராஜா மற்றும் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியலால் தஞ்சை- கும்பகோணம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,store ,Tasmac ,Tanjore ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை