×

இளைஞர் கொலையில் 7 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை, அக்.22: புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் ஊராட்சி உய்யக்குடிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பையா குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பெருமாநாடு அருகே கொல்லம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டனை சுப்பையா தரப்பினர் வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக சுப்பையா, அவரது மகன்கள் ஆனந்தன், அஜித்குமார், அரவிந்த், உறவினர்கள் கணேசன், பரமசிவம், கருப்பையா ஆகிய 7 பேர் மீது அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு