×

மின்சாரம் பாய்ந்து இருவர் பரிதாப பலி

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் சோழன்நகர் ஆடியபாதம் தெருவை சேர்ந்தவர் மாடசாமி(62).  கட்டிட மேஸ்திரி. தனது வீட்டின் மாடிக்கு படிக்கட்டு அமைக்கும் பணிக்காக திருமுல்லைவாயல் செந்தில்நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த ஜெய்சங்கர்(50) என்ற கட்டிட தொழிலாளியை அழைத்துள்ளார். பின்னர் மாடசாமி, ஜெய்சங்கர் இருவரும் படிக்கட்டு பணிக்கு பில்லர் அமைக்க ஆக்கர் மூலம்  குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரில் ஆக்கர் சிக்கி அதிலிருந்து மின்சாரம்  பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், உடல் கருகி மாடசாமி, ஜெய்சங்கர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED மதுரவாயலில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்