×

இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தந்தை எழுதிய உயிலின்படி ஆட்சியரிடம் ₹50 ஆயிரம் வழங்கிய மகள்

கடலூர், அக். 21:  தனது தந்தை எழுதிய உயிலின்படி, இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் வகையில்  ரூ.50 ஆயிரம் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் மகள்  வழங்கினார். கடலூர் திருப்பாதிரிபுலியூர், தேரடி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகசுந்தரம். வட்டாட்சியராக பணிபுரிந்த இவர், கடந்த 1996ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2019ம் ஆண்டு நவ.17ம் தேதி இறந்தார். இவர் தனது இளைய மகள் கயல்விழிக்கு எழுதிய உயில் சாசனத்தில், தமது நன்செய் நிலம் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரத்தை தனது மனைவி ரமணி அம்மாளின் நினைவாக, கடலூர் வட்டத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிடும் வகையில்  ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தந்தை எழுதிய உயிலின்படி கயல்விழி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்திரசேகரா சாகமூரியை சந்தித்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.  இவருக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி அபிநவ் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...