×

வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி

திருச்செங்கோடு, அக். 21: திருச்செங்கோடு அருகே விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட 3 ஆடுகள், வெறிநாய்கள் கடித்ததில் பலியானது. 2 ஆடுகள் காயமடைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திருச்செங்கோடு  அடுத்த எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமம் நத்தமேடு பகுதியைச்  சேர்ந்தவர் சரசு (55). இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (58).  இவர்கள் இருவரும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தங்களது விவசாய நிலங்களில் ஆடுகளை கட்டியிருந்தனர். மதியம் 2 மணியளவில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது.

அங்கு  சென்று பார்த்தபோது 5 வெறிநாய்கள் கும்பல், ஆடுகளை கடித்து  குதறிக் கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தங்களிடம் இந்த தடிகளை கொண்டு வெறிநாய் கும்பலை அடித்து துரத்தினர். வெறிநாய்கள் கடித்ததில் சரசுவிற்கு சொந்தமான 3 ஆடுகள் இறந்துபோனது. சரஸ்வதியின் 2 ஆடுகள்  காயமடைந்தன. வெறிநாய்கள் வந்தவுடன் ஆட்டு குட்டிகள் அருகில் இருந்த வீடுகளுக்குள் புகுந்ததால் உயிர் தப்பியது. இந்த நாய் கும்பல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. வெறி நாய்களால் உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு பெற்றுத்தருவதுடன், வெறிநாய்களிடம் இருந்து கால்நடைகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்