×

சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் கூட்டம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்ப்பு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு

உடன்குடி, அக்.21: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் உள்ளதாக அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்யினர் நல உரிமைப்பிரிவு அணி நிர்வாகிகளின் கூட்டம் தண்டுபத்தில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட கவுன்சிலர் ஜெஸிபொன்ராணி முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசுகையில்,

விவசாயிகளின் மானியத்தை குறைக்கவும், பல்வேறு சலுகைகளை நிறுத்தவும் புதிய வேளாண்மை திட்டம், மாணவர்களை பாதிக்க கூடிய நீட் தேர்வு, புதிய கல்வி முறைத்திட்டம், இலவச மின்சாரத்தை நிறுத்துவதற்கு மின்சார ஒருங்கிணைப்பு திட்டம், ரேஷன்கடை மூலம் வழங்கப்படும், சலுகைகளை நிறுத்த ஒரேநாடு, ஒரேரேஷன் கார்டு என்ற திட்டம். இப்படி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு அமைய தமிழகத்தில் திமுக ஆட்சி மலரவேண்டும். தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்ற ஆவலுடன் மக்கள் உள்ளனர். திமுக சார்பு அணியினர் அனைவரும் இப்போதே தேர்தல் பணியை தொடங்கி சுறுசுறுப்பாக செயல் படவேண்டும். திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கட்சி வளர்ச்சி பணிக்காக எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

கூட்டத்தில் ஆழ்வை. யூனியன் சேர்மன் ஜனகர், மாவட்ட துணை அமைப்பாளர்கள் முகமதலி ஜின்னா, ஷேக்முகமது, முகமது ஜலில், செல்சன், சாமுவேல்ராஜ், ராஜேஷ் ரவிசுந்தர், கருங்குளம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இசக்கிபாண்டி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, இளங்கோ, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் சக்திவேல், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Anita Radhakrishnan MLA ,
× RELATED ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்...