×

திருச்சுழி அருகே மான் மர்மச்சாவு

திருச்சுழி, அக். 21:  திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி, கல்லூரணி, பந்தல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காடுகள் அதிகளவில் உள்ளன. இங்கு மான்கள், முயல்கள், காட்டுப்பன்றி, கீரி போன்றவை வாழ்ந்து வருகின்றன. இவை உணவு, குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் போது வாகனங்களில் அடிபட்டோ, நாய்கள் கடித்தோ இறப்பது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் நேற்று திருச்சுழி ரயில்நிலையம் அருகே முட்புதருக்குள் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு ந்தனர். பின்னர் மானின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வு செய்து காட்டு பகுதியிலே புதைத்தனர். மேலும் மான் உடல் நலக்குறைவால் இறந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Deer Marmachavu ,Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....