விருதுநகர், அக். 21 விருதுநகர் ரயில் நிலையம் முன்பு நேற்று தட்சிணா ரயல்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. யூனியன் கிளைச்செயலாளர் சோமு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக ரயில்வே தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.