சாத்தூர், அக். 21: சாத்தூர் அருகே குமரரெட்டியாபுரம், புதுபாளையம், பந்துவர்பட்டி ஆகிய கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடை துவக்க விழா நடந்தது. இதனை சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். உடன் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், நகர செயலாளர் வாசன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாரியம்மாள், வெற்றி செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இருந்தனர்.