×

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

உத்தமபாளையம், அக்.21: உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் தூக்குபோட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி(40). இவர் குடும்ப கஷ்டநிலை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் பற்றி உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை