×

கமுதி அருகே விஷம் வைத்ததால் 15 ஆடுகள் பலி

கமுதி, அக்.21:  கமுதி அருகே விஷம் வைத்து 15 ஆடுகளை கொன்றது பற்றி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். கமுதி அருகே ராமசாமிபட்டி கோபாலபுரம் ஊரைச் சேர்ந்த அழகர்(60) என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தனது 15 ஆடுகளை வீட்டிற்கு முன்பு வேலி போட்டு பாதுகாத்து வந்த நிலையில், நேற்று ஆடுகளுக்கு வைக்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரில் மர்ம நபர்கள் விஷம் வைத்ததால் அதை சாப்பிட்ட 15 ஆடுகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அழகர் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர். இறந்த இந்த 15 வெள்ளாடுகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

Tags : Kamuti ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் –...