×

உபியில் யோகி ஆட்சிைய நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 21:   மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்ட் திருவள்ளுவர் சிலை அருகே மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு  உறுப்பினர் சரவணன் தலைமை வகிக்க, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய பொருளாளர்  லயோனல் அந்தோணிராஜ், தமிழ்புலிகள் கட்சியின் செயலாளர் பேரறிவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் உபியில் ராமராஜ்யம் பெயரிலான யோகியின் ஆட்சியை நீக்க வலியுறுத்தியும், பெண் பாலியல் படுகொலை வழக்கில் நீதி கோரியும் கோஷமிட்டனர்.

Tags : Demonstration ,removal ,UP ,
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை