×

புதுக்கோட்டையில் நடக்கும் ஆய்வு கூட்டத்திற்கு நாளை திருச்சி வரும் முதல்வரை வரவேற்க கட்சியினருக்கு அழைப்பு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை

திருச்சி, அக். 21: சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணி குறித்த ஆய்வு கூட்டம் நாளை (22ம் தேதி) நடக்கிறது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நாளை காலை 8.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். மேலும் விழா முடிந்து மாலை 5 மணிக்கு மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து சென்னை புறப்பட்டு செல்கிறார். எனவே முதல்வரை வரவேற்க கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வக்கீல் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் கோட்டத்தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், முன்னாள் தலைமை பேச்சாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட ஏனைய அணியினர் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vellamandi Nadarajan ,party ,review meeting ,Trichy ,Pudukkottai ,
× RELATED நாம் தமிழர் கட்சிக்கு மைக்...