×

சொத்து தகராறில் என்ஐஏ அமைப்பை கண்டித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 21: ஆதிவாசி மக்களின் உரிமை போராளி ஸ்டேன் சுவாமி சே.ச  வை பொய் வழக்கில் கைது செய்த மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகர தலைவர் அப்துல் நசீர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் காதர் உசேன் முன்னிலை வகித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் ஜீவகுமார், மாநகர ஒருங்கிணைப்பாளர் சிவகுரு, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் காதர் உசேன், மாவட்ட பொருளாளர் ஞானமாணிக்கம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு துணைத் தலைவர் ந.குருசாமி நன்றி கூறினார்.

Tags : Minority ,protests ,People's Welfare Committee ,
× RELATED பாஜ நிர்வாகி மீது வழக்கு