×

தினக்கூலி ரூ.400 வழங்க கோரி புதுகையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.21: ஒப்பந்த தொழிலாளர் தினக்கூலியான ரூ.400 உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும் ஒப்பந்த தொழிலாளர் தினக்கூலியான ரூ.400 உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடம் சர்வாதிகாரமாக நடந்து கொள்ளும் மின் வாரிய அதிகாரிகளை வன்மையாக கண்டித்தும் தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரவடிவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags : contract workers ,
× RELATED திருப்பதி மாநகராட்சியில் போலி...