×

இருவருக்கு வலை புதுக்கோட்டையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.21: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியூ ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு எப்.சி எடுக்கும்போது வாகனத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதை ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனமானது நிர்ணயிக்கப்பட்ட தொகையான ரூ.270-க்குப் பதிலாக ரூ.510 வீதம் வசூலிக்கிறது. இதைக் கண்டித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தர், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Auto workers ,Web Pudukottai ,
× RELATED திண்டுக்கல்லில் ஒன்றிய அரசைக்...