×

காரைக்காலில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 3,300ஆக உயர்வு

காரைக்கால், அக்.21: காரைக்காலில் நேற்று மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3,300 ஆக உயர்ந்துள்ளது. நாடு எங்கும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 33,800 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், காரைக்காலில் நேற்று முன்தினம் வரை கொரோனோ தொற்று 3,271 ஆவும், பலி எண்ணிக்கை 58ஆகவும் இருந்தது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி நூற்றுக்கு மேற்பட்டோருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில், மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,903 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 340 பேர் அரசு பொது மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...