கரூர், அக். 21: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் மண்டல தொழிலாளர் சங்கம் (ஏஐடியூசி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் திருமாநிலையூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பனிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஹரீந்திரன், மண்டல நிர்வாகி ராஜேந்திரன், பொருளாளர் செல்வராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி அட்வான்ஸ் முன்கூட்டியே வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு முதல் பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.