×

கர்நாடகாவில் இருந்து ஊட்டி வந்த பழமையான பீரங்கி ஏற்றி வந்த வாகனம் நடுவழியில் நிறுத்தம்

கூடலூர்,அக்.20:  கர்நாடகா மாநிலத்திலிருந்து கூடலூர் வழியாக நேற்று மாலை ஊட்டிக்கு மிக பழமையான பீரங்கி ஒன்று ராணுவ வீரர்களால் கொண்டு செல்லப்பட்டது.  மிக நீளமான கனரக வாகனத்தில் இந்த பீரங்கி கொண்டு செல்லப்பட்ட போது சாலையின் வளைவான பகுதிகளில் ராணுவ வீரர்கள் போக்குவரத்தை மாற்றியமைத்து பீரங்கியை கொண்டு சென்ற வாகனம் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த வண்ணம் சென்றனர். எனினும் நடுவட்டம் வரையுள்ள மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் போக்குவரத்து பாதிக்கும் என்பதால் சாலையின் தன்மையை ஆய்வு செய்து செல்லும் வகையில் தற்போது ஹெல்த் கேம்ப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : Karnataka ,Ooty ,
× RELATED ஊட்டி-கூடலூர் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது; 5 பேர் உயிர் தப்பினர்