×

ஏரல் அருகே புதுமனையில் அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா

ஏரல், அக். 20:  ஏரல் அருகேயுள்ள புதுமனை அம்மாள்தோப்பில் அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.  தலைமை வகித்த தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ இரட்டைமுத்து நினைவு கொடிகம்பத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலாளர்கள் வைகுண்டம் கிழக்கு அழகேசன், மேற்கு காசிராஜன், ஆழ்வை கிழக்கு விஜயகுமார், மேற்கு ராஜ்நாராயணன் முன்னிலை வகித்தனர். இதில் ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர்கள் மேற்கு பாஸ்கர், கிழக்கு அசோக்குமார், ஒன்றிய பொருளாளர் ரத்தினசபாபதி அம்மாள்தோப்பு நிர்வாகிகள் முருகன், கண்ணன், செல்வம், முத்துராஜ், குணமால், உமரிக்காடு பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை  புதுமணை சரவணன், ஜெ. பேரவை ஏரல் நகர இணைச் செயலாளர் முத்துவேல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : AIADMK ,inauguration ,Puthumanai ,Eral ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...