×

கணவன் டார்ச்சர் மனைவி புகார்

விருதுநகர், அக்.20: நகைகளை கேட்டு டார்ச்சர் செய்வதாக கணவன் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார். விருதுநகர் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(33). இவருக்கும் வத்தலக்குண்டுவை சேர்ந்த ராஜாவுக்கும் 2018ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 40 பவுன் நகை, ரூ.1 லட்சத்திற்கு பொருட்கள் கொடுத்துள்ளனர். குடிப்பழக்கம் உடைய ராஜா, செயின், கைச்செயினை அடகு வைத்து குடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜேஸ்வரியின் நகைகளை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. நகையை தராததால் அடித்து விரட்டியதுடன், மறுமணம் செய்ய இருப்பதாக மிரட்டி, சீதனப்பொருட்களையும் வழங்கவில்லை என தெரிகிறது. இது குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Torcher ,
× RELATED காதலிக்க வலியுறுத்தி லவ் டார்ச்சர்;...