×

ஒப்பாரி வைத்து போராட்டம்

தேனி  அக்.20:   அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் ஏராளமானோர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்ெகடுப்பு நடத்தப்படாமல் உள்ளது. இதனால் நாடு முழுதும் 80 கோடி பேர்  தங்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு சலுகைகளை இழந்துள்ளனர். எனவே, அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப்பு நடத்துதுவதோடு சீர்மரபினருக்கான திட்ட பயன்களை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர். இதில் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ராமமூர்த்தி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு