×

கால்வாய் சீரமைக்க கோரிக்கை முன்னாள் படை வீரருக்கு பணி வாய்ப்பு

சிவகங்கை, அக்.20:  கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் ஆலய பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள 36 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே கோவில் பாதுகாப்பு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, விருப்பமுள்ள 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பம் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு