×

நேருக்கு நேர் கார்கள் மோதல்

அலங்காநல்லூர் தனிச்சியம்  சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. காய்கறி சந்தைக்கு பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும்  அவர்கள் கொண்டு வரும் வாகனங்களால் மேலும் போக்குவரத்து நெரிசல்  அதிகரித்து வருகிறது.  நேற்று மாலை மதுரை நாகமலைபுதுகோட்டை சேர்ந்த லெட்சுமணன் வந்த கரும், மதுரை கலைநகரை சேர்ந்த முகமது சபீர் வந்த காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் இரண்டு கார்களும் பலத்த  சேதமடைந்தன. இந்த விபத்து தொடர்பாக அலங்காநல்லூர் போலீசில் லட்சுமணன் மற்றும்  சபீர்  தனித்தனியே புகாரளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...