×

பிளாஸ்டிக் பந்தல் அமைக்க அனுமதி கோரி தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக். 20: திருச்சி தெப்பகுளம், நந்திகோயில் தெருவில் தரைக்கடை வியாபாரம் நடந்து வருகிறது. இங்கு 150க்கும் மேற்பட்ேடார் வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் வியாபாரத்திற்காக மழை மற்றும் வெயிலை சமாளிக்க பிளாஸ்டிக் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பந்தலை போலீசார் அகற்ற உத்தரவிட்டனர். மேலும் வியாபாரம் தொடர்ந்து நடைபெற உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் விசாரித்த நீதிமன்றம் வியாபாரக்குழு அமைக்க உத்தரவிட்டனர்.

தற்போது கொரோனா ெதாற்றால் மூடப்பட்ட கடைகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. மேலும் தீபாவளி நெருங்குவதாலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாலும் மீண்டும் பிளாஸ்டிக் பந்தல் அமைக்க அனுமதிக்க கோரி திருச்சி மாவட்ட தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் நேற்று குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்வர்தீன் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர். தொடர்ந்து கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்தனர்.

Tags : shopkeepers ,pavilion ,
× RELATED வாகன சோதனையின் மூலம் சிக்கினர் ₹5...