திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி தில்லைநகர் வரை சவாரி சென்று திரும்பினார். அவரது செல்போனுக்கு மாநகர போலீசாரிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதை பார்த்த விஜயகுமார், அதிர்ச்சியடைந்தார். ஹெல்மெட் போடாமல் சென்றதற்கு அபராதம் விதித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து விஜயகுமார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். விஜயகுமார் ஹெல்மெட் அணிந்தபடி ஆட்டோ ஓட்டி வந்தார்.