×

சின்ன ஆவுடையார்கோவில் மணல் குவாரியை தொடர்ந்து நடத்த வேண்டும்

பட்டுக்கோட்டை, அக். 20: சின்ன ஆவுடையார்கோவில் மணல் குவாரியை தொடர்ந்து நடத்த வேண்டுமென மாட்டு வண்டி தொழிலாளர் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டையில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரவை கூட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். பேரவை கூட்டத்தை மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி துவக்கி வைத்தார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதிஆழ்வார், மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் மாட்டு வண்டி சங்கம் சோமசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் சின்ன ஆவுடையார்கோவில் மணல் குவாரியை தொடர்ந்து நடத்த வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய குவாரியை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை மாட்டு வண்டி சங்கம் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags : sand quarry ,
× RELATED மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு