பாபநாசம், அக். 20: பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் துணை சுகாதார நிலையம் சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கிராம சுகாதார செவிலியர் கமலாம்பாள், அங்கன்வாடி ஆசிரியை தவமணி, உதவியாளர் சித்ரா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திக்கேயன், சுகாதார ஆய்வாளர் செல்லப்பா பங்கேற்றனர்.