×

பைக்கில் தவறி விழுந்து சிகிச்சை பெற்ற வாலிபர் பலி


பொன்னமராவதி,அக்.20: பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வந்த திருச்சியைச் சேர்ந்த வாலிபர் பலியானார். திருச்சியைச்சேர்ந்தவர் லியோ மகன் கோயல்(19). இவர் பொன்னமராவதி பகுதியில் கம்ப்யூட்டர் பழுதுபாக்கும் பணியினை முடித்து விட்டு கடந்த 12ம்தேதி திருச்சிக்கு பைக்கில் சென்றுள்ளார். பொன்னமராவதி-ஆலவயல் சாலையில் தூத்தூர் என்ற இடத்தில் பைக்கில் நிலை தடுமாறி விழுந்து பலத்த காயத்துடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிசிச்சை பலனின்றி கோயல் இறந்தார்.இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...